தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு உள்ள கடைத்தெருவில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் பாலாஜிசந்தோஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் 3ம் தேதி காலை கடையின் முன் நிறுத்தி இருந்தார்.
வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்த பொழுது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை, அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தர கோரி இன்று புகார் அளித்தார், புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
.gif)

.jpeg)