மாரண்டஅள்ளியில் முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 மே, 2024

மாரண்டஅள்ளியில் முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு வழங்கினார்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி 4 ரோட்டில் திமுக நகர கழகம் சார்பில்  கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா  பேரூராட்சி தலைவர் வெங்கடேசன்  அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர், மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன்  அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களின்  தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி, இளநீர், நீர்மோர், எலுமிச்சைசாறு, வெள்ளரிக்காய், பனை நுங்கு உள்ளிட்டவைகளை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,  வக்கில் கோபால், முனியப்பன், அடிலம் அன்பழகன், பேருரட்சி கவுன்சில்கள், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என  திரளானோர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad