Type Here to Get Search Results !

சோமனஅள்ளி கிராமத்தில் குடிப்பழக்கத்தை கைவிட மனைவி கூறியதால் விரக்தியில் கனவன் தூக்குபோட்டு தற்கொலை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருேகேசன் (வயது.57), இவரது மனைவி பழனியம்மாள் (வயது.50) இவர்களுக்கு 2 மகன்கள் 1மகள் உள்ளனர்.அனணவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் முருகேசன் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளார்.

இதனை கண்ட அவரது மனைவி குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை வழங்கி உள்ளார். இதனால் விரக்தியடைந்த முருகேசன் நேற்று காலை வீட்டிற்க்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884