இலக்கியம்பட்டி வாக்குசாவடி மையத்தில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

இலக்கியம்பட்டி வாக்குசாவடி மையத்தில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி பாராளுமன்ற தொகுதி, இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குசாவடி மையத்தில் (Web Streaming) இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (16.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி பாராளுமன்ற தொகுதில் 320 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில்லுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1489 வாக்குசாவடிகளில் 967 வாக்குசாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இவ்வாக்குச்சாவடிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் தேர்தல் நுண்பார்வையாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், இவ்வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு அம்சங்கள் வாக்குசாவடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நுண் பார்வையாளர்கள் தேவையான கேமிராக்கள் மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விரிவாக ஆய்வு செய்ததுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.


வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சார வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதையும், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று பார்வையிட்டார்.


இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.தனப்பிரியா, மாவட்ட தகவலியல் அலுவலர் திரு.சத்தியமூர்த்தி, வட்டாட்சியர்கள் திரு.பி.ஜெயசெல்வன், திருமதி.பார்வதி, திரு.ஆறுமுகம் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.