இதனால் சோமனஅள்ளி ஏரி வழியாக செல்லும் மோதுகுலஅள்ளி தார்சாலை முற்றிலும் சேதமானது, நொரம்பு மண் அள்ளி முடித்ததும், புதிய தார்சாலை அமைத்து தருவதாக சாலைஅமைக்கும் பணியினை மேற்கொண்ட ஸ்ரீ இன்பெராடெக் நிறுவனத்தினர் உறுதி அளித்தனர், வேலை முடிந்து ஒரு வருடத்திற்க்கு மேலாகியும் இதுவரை அப்பகுதியில்தார் சாலை அமைக்கப்படாததால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலையில் பெயர் பலகை மற்றும் மின் விளக்கு இல்லாததாலும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் அலைகழித்து வந்ததால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு உடனடியாக தார்சாலை பெயர் பலகை, மின் விளக்கு அமைக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சாலை மறியல், மாவட்ட ஆட்சியர் அலுவலம் முற்றுகை என தொடர் போராட்டம் நடத்த போவதாக ஸ்ரீ இன்பெராடெக் நிறுவன மேலாளர் மதனிடம் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக