தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அறிவிப்பு பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அறிவிப்பு பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.


தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக முனைவர் சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து அரூர் பாமக நகர செயலாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான பேக்கரிபெருமாள் தலைமையில் பாமகவினர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இதில் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் சேகர் மற்றும் நிர்வாகிகள் பிரகாசம் வெங்கடேசன் பிரபு  ஏழுமலை அறிவு ஸ்ரீதர் கோன்றி காசிகாபெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad