Type Here to Get Search Results !

பாலக்கோடு அன்னாநகர் ஸ்ரீ ஞானவேல்முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா, பக்தர்கள் காவடி எடுத்து கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, அன்னாநகர் உள்ள ஸ்ரீஞானவேல்முருகன் கோயில்  பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா  நடைப்பெற்றது.

  

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை, வள்ளி தெய்வானை திருமணத்தை தொடர்ந்து, முக்கிய நாளான இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு,  பக்தர்கள் அலகு குத்தியும்,   கரகம் எடுத்த்தும், பால்குடம் எடுத்தும், தங்களது   தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.


அதனை தொடர்ந்து, ஸ்ரீ ஞானவேல் முருகனுக்கு    பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. சுவாமி  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து நேற்று இரவு வள்ளி, தொய்வானையுடன் சுவாமி திருவீதி உலா நடைப்பெற்றது.


இந்த வீதி உலாவானது கோயிலில் தொடங்கி தக்காளி மார்க்கெட், கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்றது, இதில் பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடியும், குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தும் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஊர் கவுண்டர் குடும்ப வகையறாக்கள், பழனி கவுண்டர் குடும்பத்தினர் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies