Type Here to Get Search Results !

காரிமங்கலம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும் அபராதம்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம் பைபாஸ் சாலை பொன்னேரி பகுதியில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய கிரேடு1 காவலர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்த போது ஒரு மளிகை கடையில், ஆய்வில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள்  நான்கு கிலோ கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

மேற்படி தகவலை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்  ஏ.பானுசுஜாதா எம்‌‌பி.,பி.எஸ்., அவர்களுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் நியமன அலுவலர் அவர்கள் மேற்படி கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ்  வழங்கி உடனடி அபராதம் ரூபாய்.25000 விதித்து உத்தரவிட்டு உடனடி செயல் நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்களுக்கு ஆணையிட்டார். 


அதன் பேரில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவலர் கோவிந்தசாமி இணைந்து மேற்படி    கடையை மூடி உடனடி அபராதம் ரூபாய்.25000 மற்றும் கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ் உத்தரவினை நேரில் வழங்கினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884