Type Here to Get Search Results !

எலங்காளப்பட்டி கிராமத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எலங்காளப்பட்டி  கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் பாலக்கோட்டில்  உள்ள பள்ளயில் 10ம் வகுப்பு படித்து வந்தார், மாணவியின் விருப்பத்தை மீறி  கடந்த ஆண்டு ஜீன் மாதம் 1 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் பெற்றோருக்கு தெரியாமல் பார்க்கோடு அருகே உள்ள முருகன் கோயிலில்  திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த மார்ச்.13 ம் தேதி பாலக்கோடு மகளிர்  போலீசில்   வாலிபர்  மீது   புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வந்த நிலையில், வாலிபரை கைது செய்த   போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies