தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 மார்ச், 2024

தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் அருகில் தருமபுரி பச்சமுத்து குழுமங்களின் சார்பில் உள்ள நர்சிங் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.03.2024) துவக்கி வைத்தார்கள்.


பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஒட்டுவில்லைகளை வழங்குதல், விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்துதல், தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


அந்தவகையில் இன்றைய தினம் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமங்களின் சார்பில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இம்மனித சங்கிலி நிகழ்ச்சியில் தருமபுரி பச்சமுத்து குழுமங்களின் சார்பில் உள்ள நர்சிங் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரிகளை சார்ந்த சுமார் 2500 மாணவிகள் கலந்துகொண்டனர். ”தேர்தலின் பெருமை நாட்டின் பெருமை”, ”நாட்டிற்கான எனது முதல் வாக்கு“, ”விரலுக்கு மையிட்டு நாட்டின் விதியை மாற்றுவோம்”, ”முதல் பெரு(மை)” உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


இந்த மனிதச்சங்கிலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து நான்கு முனை சாலை சந்திப்பு வரை மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்றனர். மேலும், தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், பச்சமுத்து கல்லூரிகளின் துணைத் தலைவர் திரு. சங்கீத்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.சாகுல் ஹமீத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், உதவி திட்ட இயக்குநர் திருமதி.ஷகிலா, பச்சமுத்து கல்லூரிகளின் முதல்வர்கள் திரு.இன்பசேகர், திருமதி.சிவகாமி, மரு.ராதாகிருஷ்ணன், தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன், வருவாய்த்துறை, மகளிர் திட்டம் அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad