Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாக பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கி  வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது, இத்திருவிழாவிற்க்கு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த இலட்சக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த உள்ளனர்.


இதனையொட்டி பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மற்றும்  பக்தர்கள் ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் வளாக பகுதியை பக்தர்களின் நலன் கருதி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


மேலும் பேளாரஅள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுமாறும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் விழிப்புணர்வு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies