Type Here to Get Search Results !

கொட்டாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கொட்டாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே வி குமார் தலைமை வகித்தார். பள்ளியின் மூத்த ஆசிரியர் மா நாகேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக பென்னாகரம் ஒன்றிய குழு துணை தலைவர் அற்புதம் அன்பு அவர்கள் பங்கேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  ரங்கநாதன் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினை சார்ந்த தங்கம், சூர்யா  மற்றும் உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் ஊராட்சி தலைவர்  ராஜசேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கெடுத்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


இப்பள்ளியின் பட்டதாரிஆசிரியர்கள் சி சுரேஷ், செல்வம், சுரேஷ், ரத்தினகுமார், தீபா ,கா மா சுரேஷ், திரு. குமார் ஆய்வக உதவியாளர் லதா, விஸ்வநாதன். உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர் பள்ளியின் ஆண்டறிக்கை வைர லட்சுமி அவர்கள் வாசித்தார் நிறைவாக கணித ஆசிரியர் மா.சுரேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் அரையாண்டு மற்றும் திருப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது.


ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்களின் நடனங்களும் மாணவர்கள் அமைத்த பிரமீடும். தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சியும் மிகவும் சிறப்பாக இருந்தது கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தது  நிகழ்ச்சிகளை தொகுத்து மல்லிகா அவர்கள் வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies