Type Here to Get Search Results !

மோதுகுலஅள்ளி கிராமத்தில் மேல் படிப்பு படிக்க வைக்க முடியாது என தந்தை கூறியதால் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மோது குல அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி (வயது. 45) இவருக்கு 2 மகன்  மற்றும் 1 மகள் உள்ளனர். இவரது மகள் இலட்சுமிபிரியா (வயது.22) என்பவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு  திருமணம் செய்ய இவரது  தந்தை முனுசாமி வரன் பார்த்து வந்தார்.

ஆனால் இலட்சுமிபிரியா தான் எம்.எஸ்.சி முதுகலை படிப்பு படிக்க விரும்புவதாகவும். இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் முனுசாமி குடும்ப சூழ்நிலையை எடுத்து சொல்லி திருமணம் செய்து கொள் என கூறியுள்ளார். எதுவும் பேசாமல் நேற்று முன்தினம் தூங்க சென்றவர்  விரக்தியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். விடிந்து நீண்ட நேரமாகியும், பலமுறை அழைத்தும்  கதவு திறக்காததால், கதவை உடைத்து பார்த்த போது இலட்சுமிபிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies