Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்தவரின் உடல் நல்லடக்கம்.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துப்பட்டி கிராமம் அருகே அரூர் சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரைப் பற்றி விசாரித்ததில் உறவினர்கள் எவருமில்லை என்பதை உறுதி செய்து அவரின் உடலை மை தருமபுரி அமரர் சேவையினர் நல்லடக்கம் செய்தனர். 

இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் சிவராமகிருஷ்ணன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சமூக சேவகர் முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 78 ஆதரவற்ற உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies