Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.01.2024) வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசால் பேருந்து வசதி இல்லா குக்கிராமப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் தடைபடாமல் இருக்கவும், அவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 5,783 மாணவர்களுக்கு தலா ரூ.4,900/- மதிப்பிலும், 6,717 மாணவிகளுக்கு தலா ரூ.4,760/- மதிப்பிலும் என மொத்தம் ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் 12,500 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 257 மாணவிகளுக்கும், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 125 மாணவர்களுக்கும் என மொத்தம் 382 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் 13,367 மாணவ மாணவிகளுக்கும், 2021-22 ஆம் கல்வி ஆண்டில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் 17,218 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான திட்டங்களுள் ஒன்று புதுமைப்பெண் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 


இந்நிதி உதவியினை உயர்கல்விக்கு உத்திரவாதமாக மாணவிகள் பயன்படுத்தி கொண்டு, உயர்ந்த இடத்தை மாணவிகள் அனைவரும் எட்டவும், உயர்கல்வி என்பதை உங்கள் இலக்காகவும் கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகைகள் வழங்கும் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார்கள். இதனால் இன்றும் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றார்கள். 


மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல மனிதனாக உருவாவதற்கு அடிப்படை கல்வி. அதை கற்பிப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளையும், கற்பிக்கின்ற பாடங்களையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் கற்று கொடுக்கின்ற பாடங்களை முழுமையாக கற்றுகொள்ள வேண்டும். உங்களின் எதிர்காலத்திற்காக உழைத்து கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து மாணவர்களின் கல்வி அறிவு உயர்வதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.


மாணவ, மாணவியர்களின் நலனுக்கென தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறந்தமுறையில் பயன்படுத்தி சிறப்பான கல்வியை பயின்று மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) திரு.வி.விஜயகுமார், வட்டாட்சியர் திரு.சௌகத்அலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் திரு. கி. வீரமணி, பென்னாகரம் பேரூராட்சித் துணைத்தலைவர் திருமதி. வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் திரு. பி.கே. குமார் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனைவர்.சு.கீதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர் திருமதி.விஜயலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884