Type Here to Get Search Results !

மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க 1000ஆவது நாள் உணவு சேவை திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


மை தருமபுரி அமைப்பின் சார்பில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி சேவையாற்றி வந்தனர். உணவு சேவை தொடர்ந்து 999 நாள் கடந்து இன்று ஆயிரமாவது நாளை ஒட்டி தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.  


இந்த அமைப்பு நாள்தோறும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பசிக்குதா வாங்க சாப்பிடுங்க என்ற வாசகத்துடன் பொதுமக்களுக்கு இலவசமாக  மதிய உணவு வழங்கி வருகின்றனர்.  மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் பெண்கள் உள்ளிட்டோர் உணவை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். 


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் மை தருமபுரி அமைப்பு போல இவர்களின் செயல்பாடு கேட்டு அறிந்து கடலூர் மாவட்டத்தில் மை கடலூர், மை குறிஞ்சிப்பாடி என பொதுமக்களுக்கு பசியாற்றும் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார் . தான் தனது வீட்டில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்து வருவதாகவும் தெரிவித்தார். 


நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்ர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, சி.கே.எம் ரமேஷ், தருமபுரியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம் , முஹம்மத் ஜாபர் மற்றும் மை தருமபுரி அமைப்பினர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884