இந்த முகாமில் கோவை ஆர்.வி.எஸ். கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ம.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது : பொதுவாக 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். தங்களுக்கு தெரிந்தவர்கள் வெற்றி கண்ட துறையை தேர்ந்தெடுத்து படிப்பது, பெற்றோர்களின் வற்புறுத்தலினால் ஒரு துறையை தேர்ந்தெடுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து அனைவரும் ஒரே துறையை படிப்பது போன்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. உயர் கல்வியை தேர்வு செய்யும்முன், எந்த துறையை தேர்வு செய்து படித்தால் தனது லட்சியத்தை அடையலாம் என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கையோடு இணக்கமான ஒன்றாக மாறிப்போய்விட்டது.
கல்வி, ஊடகம், போக்குவரத்து, வங்கித் துறை என பல்வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வருகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே அதிக முக்கியம் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் பிரிவுகள் அல்லாத பிற பாடப் பிரிவுகளிலும் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் அதிக மாத ஊதியம் பெறும் நிலையுள்ளது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பை தேர்வு செய்யும்போதே எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்தும் டிஜிட்டல் யூகத்திற்கான கல்வி பற்றியும் தங்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்து உயர்கல்வியில் சேர வேண்டும் என தெரிவித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

