தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 16.01.2024 (செவ்வாய் கிழமை) “திருவள்ளுவர் தினம்”, 25.01.2024 (வியாழன் கிழமை) “வடலூர் இராமலிங்கர் நினைவு நாள்” மற்றும் 26.01.2024 (வெள்ளி கிழமை) “குடியரசு தினம்” ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் படைவீரர் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.
மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.