Type Here to Get Search Results !

தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, வருகின்ற 02.02.2024-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.டி.ஆர். கீதாராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies