Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

நுண்ணீர் பாசன விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


மானியத்தில் பெறுகின்ற நுண்ணீர் பாசனக் கருவிகளை விற்க வேண்டாம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து வகையான பயிர்களுக்கும் பிரதமரின் நுண்ணீர் பாசனக் திட்டம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி மற்றும் அதிக மகசூல் எடுக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நுண்ணீர் பாசனக் கருவிகள் அனைத்தையும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு பராமரிக்கவேண்டும் சொந்த பயன்பாடின்றி வேறு எவருக்கும் எந்த சூழ்நிலையில் விற்கக் கூடாது. இதனை மீறி, விற்கப்படும், நுண்ணீர் பாசனக் கருவிகளை பழைய இருப்புக்கடை உரிமையாளர்கள் வாங்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. நுண்ணீர் பாசனக் கருவிகள் அரசின் பொருள் என்பதால் மீறிவிற்கப்படும் நிலையில் கண்டறியப்பட்டால் அவ்விவசாயிக்கு வழங்கப்படும் அரசின் பிற மானியத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. 


இதேபோல, அரசின் மானியத் திட்டத்தில் பெறப்பட்ட நுண்ணீர் பாசனக் கருவிகளை பழைய இருப்பு மற்றும் பிளாஸ்டிக் கடை உரிமையாளர்கள் வாங்கியது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884