தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அரூரில் சமத்துவ பொங்கல் விழா வட்டார இயக்க மேலாளர் சே.அறிவழகன் தலைமையில் கொண்டாடப்பட்டது மகளிர் சுய உதவி குழுவினர் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர், பின்னர் இக்குழுவினர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார இயக்க மேலாளர் சே.அறிவழகன் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் குழுவினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.