Type Here to Get Search Results !

ஸ்ரீ குந்தியம்மன் கோவிலில் கரகத் திருவிழா கோலாகலம்.


கோவிலூர் கிராமத்தில் ஸ்ரீ குந்தியம்மன் கோவிலில் கரகத் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தர்மபுரி மாவட்டம் புலிகரை அருகே கோவிலூரில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீ குந்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 3ம்  நாள் கரக திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே சாமிக்கு பால் இளநீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் மற்றும் ஆராதனையும் அதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ குந்தியம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. 


மேலும் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட கரகம் அங்குள்ள கிராமத்தின் வழியாக திருவீதி உலா வந்தது. அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பூஜைசெய்து தீ மிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில் அடிப்படை வசதிகளான கழிப்பறை உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். பக்தர்களுக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies