Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே கோடியூர் கிராமத்தில் 5.40லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழல்கூடம் கட்டும் பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், ஜெர்தலாவ் ஊராட்சி  கோடியூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணிக்கு ஜெர்தலாவ் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் பூமி பூஜை நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  முன்னாள்  அமைச்சர், கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு   பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள்  கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி, பி.செட்டி அள்ளி பஞ்சாயத்து தலைவர் கணபதி, பாலக்கோடு அதிமுக நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies