அதனை தொடர்ந்து இன்று குலுக்கல் முறையில் மூன்று அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துனிக்கடை வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கே.ஜி.எம். குழும ஸ்தாபகர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர்.மோகன பிரியா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டதில் காவப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணி(35), கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(30), எலங்காளப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (23) ஆகிய மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், பாலகிருஷ்ணன், மோகன பிரியா, கே.ஜி.எம்.குழும கெளரவ தலைவருமான கே.ஜி.மாதையன் ஆகியோர் புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை மூவருக்கும் பரிசாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் சில்க் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

