Type Here to Get Search Results !

தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் காலாஷ்டமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மபுரி அடுத்து அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் கோவிலில்  ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும், பைரவரை தரிசனம் செய்வதற்காக உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இன்று பைரவர் ஜெயந்தி காலாஷ்டமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பைரவரை தரிசனம் செய்தனர். இங்கு வரும் பக்தர்களுக்கு உழவார பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான ஏற்பாட்டினை பிரபாகரன், சாய் ஆறுமுகம், முத்து, வெற்றி, துரை முருகன், முருகன், சண்முகம், லோகு, ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உழவார பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884