Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பூங்கா அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.


மாரண்ட அள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேரூராட்சிக்குட்பட்ட  3-வது வார்டு கவுனூரில் பேரூராட்சிக்கு சொந்தமான 4.5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பூங்கா அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் மாரண்டஅள்ளி பேரூராட்சி மூணாவது வார்டு கவுனூரில் 4.5 ஏக்கர் பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையிலும் பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா அவர்கள் முன்னிலையில் தேக்கு,கொய்யா,வேம்பு உள்ளிட்ட 1300 மரக்கன்றுகள் நடும் பணியினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற  கவுன்சிலர்கள் யதிந்தர், சிவக்குமார், கார்த்திகேயன் மணிகண்டன், அலுவலர்கள் சம்பத், தங்கராஜ், கோவிந்தராஜ், மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies