Type Here to Get Search Results !

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (27.12.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 18.12.2023 முதல் இன்று வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற்றது. தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் நடைபெற்றது.


இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி தருமபுரி வரை சென்று முடிவடைந்தது. பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், தமிழ்மெழியின் அவசியம் குறித்தும், சிறப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.


இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884