Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை காணொலி காட்சியின் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை காணொலி காட்சியின் வாயிலாக இன்று திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை காணொலி காட்சியின் வாயிலாக இன்று (27.12.2023) திறந்து வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி கட்டடத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்கள். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பார்வையிட்டார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் 400 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 28 அறைகளுடன், சுமார் 200 மாணவர்கள் உணவு அருந்தும் வகையிலான உணவு அருந்தும் அறை, சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் இவ்விடுதி கட்டப்பட்டு இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி.இலட்சுமி நாட்டான் மாது, நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, நல்லம்பள்ளி ஒன்றியக் குழு துணை தலைவர் திரு.பெரியண்ணன், செயற்பொறியாளர் (தட்கோ) திரு.நாகராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.சாகுல் அமித், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திரு.சுப்பிரமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவர்கள், காப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884