Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கீழே விழுந்த மின் கணக்கீட்டாளர் உயிரிழப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், அடுத்த பாப்பாரப்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் கழிப்பறைக்குச் சென்று விட்டு திரும்பிய போது கீழே விழுந்த மின் கணக்கீட்டாளர் உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரனஹள்ளி வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் முருகன் (49). இவர் பாப்பாரப்பட்டி துணை மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார். 


திங்கள்கிழமை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த முருகன் கழிப்பறைக்குச் சென்று விட்டு, திரும்பி வரும்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட சக பணியாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் முருகனை பரிசோதனை செய்த பிறகு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884