Type Here to Get Search Results !

மருதம் நெல்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்தான வழிகாட்டி நிகழ்வு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்தான வழிகாட்டி நிகழ்வு ஜெயம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.பரஞ்சோதி முன்னிலை வகித்தார். கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் மா.பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக உதயகுமார் பங்கேற்று மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்கினார்.  நிகழ்வில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்வு நிறைவாக வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் நன்றி கூறினார். நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies