Type Here to Get Search Results !

தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வான வீரர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாமினை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.


பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வான வீரர்களுக்கு விளையாட்டு பயிற்சி முகாமினை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.



தருமபுரி மாவட்டம்  பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வான தமிழக ஹாக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் முகாமினை  முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.


இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான ஹாக்கி விளையாட்டுபோட்டி  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் வரும் 28ம் தேதி முதல் ஒரு வாரம்  நடைப்பெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தமிழக ஹாக்கி அணியை சேர்ந்த  17 வயதுக்குட்பட்ட ஹாக்கி வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.


இதற்கான பயிற்சி முகாம்  பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியல் இன்று துவங்கியது, இம்முகாமினை  தருமபுரி மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா  அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்து, இதில் கலந்து கொண்டு பயிற்சியில் விளையாடும்  மேற்கு மண்டல காவல் துறை அணி மற்றும்  தமிழக அணி வீரர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தனர், அது சமயம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ரங்கநாதன், குப்பாகவுண்டர், குமார், குமரன், அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies