Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தொடர்மழையினால் நீர்நிலைகள் நிரம்பியது,. ஏரிக்கு மலர் தூவி வரவேற்ற அதிமுக அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார்.


தருமபுரி மாவட்டதில் தொடர்மழையினால் நீர்நிலைகள் நிரம்பியது,. ஏரிக்கு மலர் தூவி வரவேற்ற அதிமுக அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பொழிவினால் ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது, இந்நிலையில்  கடந்த மாதம் கே.ஈச்சம்பாடி வலது புற கால்வாயில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது, அதனைத் தொடர்ந்து பெரமாண்டபட்டி, நவலை வழியாக அரூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில் உள்ள பூசான் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

இதனால் மகிழ்ச்சிடையந்த கிராமமக்கள் ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்குமார் மலர் தூவி தண்ணீரை வரவேற்றார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சிவன், முன்னாள்  கூட்டுறவு இயக்குனர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கமலேசன், ஆயக்கட்டு இயக்குனர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies