Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம் மற்றும் சீல்.


தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கும் நோக்கில், மாவட்டம் முழுவதும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்த ஆய்வில், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பெயரில் அபராதம் மற்றும் கடை இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அவ்வாறே இன்றையதினம் காரிமங்கலத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் யுயல்மூர்த்தி உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பந்தாரள்ளி அஞ்சல் முள்ளனூர் துவக்கப்பள்ளி அருகில் வண்டிக்காரன் கொட்டாயில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட மேற்படி கடைக்கு, நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா அவர்கள் உத்தரவின் பேரில் ரூபாய்.5000 அபராதமும் கடை  இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கி மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக்கூடாது என எச்சரித்து சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884