Type Here to Get Search Results !

பாலக்கோடு காங்கிரஸ் ஸ்தூபி மைதானத்தில் 75 ம் ஆண்டு நினைவு ஸ்தூபியில் கொடியேற்று விழா.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காங்கிரஸ்  ஸ்தூபி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் நினைவு போற்றும் வகையில் கடந்த 75 அண்டுகளுக்கு முன்னர் நினைவுஸ்தூபி அமைக்கப்பட்டது.

அதன் 75வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுஸ்தூபி புதுப்பிக்கப்பட்டு கொடியேற்று விழா இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்சிக்கு பாலக்கோடு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தக்காளி கணேசன் தலைமை வகித்தார். விவசாய பிரிவு மாவட்ட தலைவர் அன்பழகன்,மாவட்டவட்டார தலைவர்கள் ராஜேந்திரன், சிலம்பரசன், ஜல்லி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் சொல்லின் செல்வர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார், முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் தியாகிகளின் உருவ படங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்ரமணி, மாவட்ட நிர்வாகிகள் சீதாராமன், செந்தில், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் தவமணி, நகர துணைத் தலைவர் பாலாஜி குமார், நகர செயலாளர் ரகமத்துல்லா, உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நகர பொருளாளர் நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884