Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி சைக்கிள் சென்ற முதியவர் உயிரிழப்பு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்பன் (63). இவர் வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எட்டியாம்பட்டி சர்ச் அருகில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சைக்கிளில் சென்ற முதியவர் குப்பன் மீது மோதி விபத்துக்குள்ளானது. 


விபத்தில் படுகாயம் அடைந்த குப்பன் கோயமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் குப்பன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies