Type Here to Get Search Results !

கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.


கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023-24-ம் ஆண்டு அரவைப் பருவம் 16.11.2023 வியாழக்கிழமை அன்று காலை துவங்கப்பட இருந்தது, மழையின் காரணமாக 18.11.2023 சனிக்கிழமை அன்று மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களால் இனிதே துவங்கப்பட உள்ளது.

இத்துவக்க விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies