Type Here to Get Search Results !

பெரியாம்பட்டி ஒயின்ஷாப் அருகே மோட்டார் சைக்கிள் - மொபட் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி மற்றும் அவரது தாய் படுகாயம்.

மாதிரி படம்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சின்னபுதுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது.40) இவர் தனது தாய் பழனியம்மாள் (வயது. 59) என்பவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் தர்மபுரியில் உள்ள  மருத்துவமனைக்கு செல்ல கடந்த மாதம் 26ம் தேதி தனது மோட்டார் சைக்கிள் பின்புறம் தனது தாய் பழனியம்மாளை  உட்கார வைத்து கொண்டு காரிமங்கலத்திலிருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார், பெரியாம்பட்டி ஒயின்ஷாப் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மொபட்டும்,  மோட்டார் சைக்கிளிலும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் முனியப்பன், பழனியம்மாள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த முனியப்பன்  கொடுத்த புகாரின் பேரில் இன்று காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies