Type Here to Get Search Results !

மேக்கலாம்பட்டி கிராமத்தில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம்  கரகதஅள்ளி பஞ்சாயத்து மேக்லாம்பட்டி கிராமத்தில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை ஒன்றிய குழு உறுப்பினர் இராசமணி தலைமையில் நடந்தது.

மேக்கலாம் பட்டி கிராமத்தில் மழை காலங்களில், தெரு சாலைகள் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் நடந்து செல்லவே பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் எனவே இப்பகுதியில் புதிய சிமென்ட் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இவர்களது கோரிக்கையை ஏற்று திமுக ஒன்றிய குழு உறுப்பிணர் ராசாமணி அவர்கள் ஒன்றிய குழு உறுப்பிணர் நிதியிலிருந்து சிமென்ட் சாலை அமைக்க 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கரகத அள்ளி பஞ்சாயத்து தலைவர் ராஜிமுத்துவேல் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் பஞ்சாயத்து செயலாளர் சண்முகம், பஞ்சாயத்து வார்டு உறுப்பிணர்கள், ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், கோல்கார கவுண்டர், அதிமுக ஐடி விங் ஷிரிகாந், காண்ட்ராக்டர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884