Type Here to Get Search Results !

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு மாலையிட்ட பென்னாகரம், தருமபுரி MLAக்கள் பங்கேற்பு.


அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி அவர்களும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களும் தருமபுரி நகரத்திலுள்ள மகாத்மா காந்தி திருஉருவ சிலை மற்றும் கர்மவீரர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்வில் பாமக மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு மாவட்ட தலைவர் வாசுநாயுடு, மாவட்ட பொறுப்பாளர்கள் கோ.சின்னசாமி, முன்னாள் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர் தமிழன், நகர செயலாளர்கள் வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேஷ், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் ரா.கார்த்திகேயன், நகர தலைவர் குமார், முன்னாள் நகர செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையத் கலீம் மற்றும் நிர்வாகிகள் தீபன், நஞ்சப்பன், பைரோஸ், ஹரிகிருஷ்ணன், கிருஷ்ணன், தனசேகரன், மனோஜ், ஷாஜகான் உள்ளிட்டோர்  கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies