Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி கலந்து கொண்டார்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடு‌த்த பாப்பாரப்பட்டி அருகேவுள்ள சஜ்ஜல அள்ளி கிராமத்தில் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். 


அதில் பொதுமக்கள் போதிய அளவு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், அவற்றை விரைந்து சரி செய்து தருவதாக எம்எல்ஏ வாக்குறுதி அளித்தார் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறை ஆகிய இரு துறையினர்  மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா ஆறுமுகம் பாடி செல்வம், சுதா கிருஷ்ணன், செல்வகுமார் வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies