Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளியில் மாற்று கட்சியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


தருமபுரி மாவட்டம்  மாரண்டஅள்ளியில் மாற்று கட்சியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்  முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அதிமுக கட்சி அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழா அதிமுக  நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைப்பெற்றது.


மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திமுக, பாமக தேமுதிக உள்ளிட்ட  மாற்று  கட்சிகளில் இருந்து விலகி  அதிமுக நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் அதிமுக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு, வேட்டி அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால்,  மாவட்ட கவுன்சிலர் சரவணன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநான்  மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies