Type Here to Get Search Results !

சோலைக்கொட்டாய் பாலம் அருகே மொபட் குறுக்கே நாய் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் குழந்தை சாவு.


தர்மபுரி மாவட்டம் குண்டலப்பட்டி கிராமம் மேல்வீதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது.32) இவரது மனைவி திவ்யா (வயது. 28) இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது. இவர்களுக்கு நாலரை மாதத்தில் ஜெய்சுதன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

கடந்த 19ம் தேதி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துமனைக்கு செல்ல திவ்யா தனது  மாமியாருடன் குழந்தையை மொபட்டில் அழைத்து கொண்டு தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார். சோலைக் கொட்டாய் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது தெரு நாய் குறுக்கே வந்தால் திடிர் பிரேக் போட்டார்,


இதில்    நிலை தடுமாறி குழந்தையுடன் அனைவரும் கீழே விழுந்தனர். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களுர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தது.


இது குறித்து இன்று மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies