Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி திறந்து வைத்தார்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்பனநாயகனஹள்ளி கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வந்தது.இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது இங்கு இயங்கி வந்த கடை பழுதடைந்து மழை வந்தால் ஒழுகும் நிலையில் இருந்ததால் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர், மக்களின் கோரிக்கையை 7லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி புதியதாக கட்டி முடிக்கபட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன், பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி, கவுன்சிலர் வென்னிலா ஆறுமுகம், பாடி செல்வம், சுதாகிருஷ்ணன், தலைவர் கோவிந்தசாமி, முன்னால் துணைத்தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies