Type Here to Get Search Results !

சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின்140 பிறந்தநாள் விழா சுப்பிரமணிய சிவாவின் பேரன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி யில் அமைந்துள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 140வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் தம்பி வழி பேரன் கல்யாணராமன் அவர்கள் கலந்துகொண்டு தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின்  நினைவாலயத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். 


மேலும் தியாகி சுப்ரமணி மணிய சிவா அவர்களின் கனவான பாரதமாதா கோவிலுக்கு சிறப்பு பூஜை செய்ய அகில இந்திய சன்னியாசிகள் சங்க தலைவர் ராமானந்த சுவாமிகள்  ஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரத அன்னைக்கு காவிரி கங்கை போன்ற புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பாரத தாய்க்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார் மேலும் தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு தலைவர் இமானுவேல் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் இமானுவேல் அவர்கள் செய்தார் இந்த நிகழ்ச்சியில் பாரதி செம்மல் பட்டிமன்ற பேச்சாளர் வைஜெயந்தி அவர்கள் கலந்து கொண்டார். 


மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜககல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் சுதா பரிமளன் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத் தலைவர் ராமகிருஷ்ணன் மாதப்பன் தர்மகர்த்தா மோகன்ராஜ்  தொழிலதிபர் மோகன் மற்றும் பொதுமக்கள் மக்கள் கலந்து கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies