Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

நல்லம்பள்ளி அடுத்த சேத்துக்குழி கிராம பகுதியில் மின்பற்றா குறையினை போக்கும் வகையில் புதிய மின் மாற்றிகளை திறந்துவைத்தார் MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஅள்ளி ஊராட்சி, சேத்துக்குழி கிராம பகுதியில் மின்பற்றா குறையினை  போக்கும் வகையில் ரூபாய் 5.93 இலட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி திறன்கொண்ட புதிய மின்மாற்றியும், காந்திநகர் பகுதியில் ரூபாய் 5.93 இலட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி திறன்கொண்ட புதிய மின்மாற்றி மற்றும் கூடுதலாக ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் 1.5 எம்.வி திறன்கொண்ட பூஸ்டரையும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இந்திராணி, உதவி மின்பொறியாளர் அமலநாதன், செயற்பொறியாளர் ரவி, பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் இராஜீவ்காந்தி, வ.அறிவு, ஒன்றிய தலைவர் பச்சியப்பன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் சதிஷ், நிர்வாகிகள் சக்தி, செல்வம், இலட்சுமணன், குபேந்திரன், செந்தில்குமார், சின்னதம்பி, செல்வகுமார், கோவிந்தன், சம்பத், கிரி, புஷ்பாகரன், கருப்பண்ணன், இளஞ்செழியன், பச்சியப்பன், காமராஜ், மூர்த்தி, பிரகாஷ், மல்லன், மாதேஷ், பழனி, சேட்டு, தனசேகரன், சந்திரகாந்த், சாமியார்சிவா, பாட்டாளி மாது, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் எம்.பிரேம்குமார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies