Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு திட்டத்தில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சீரமைக்கும் பணி தொடக்கம்.


பள்ளிக்கல்வித்துறையின் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு திட்டத்தில் தருமபுரி நகராட்சி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 304.50 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்கும் பணிக்கும், நல்லம்பள்ளி  ஒன்றியம், ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 17.68 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன கழிவறை அமைக்கும் பணிக்கும் பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், உதவி இயக்குநர் இளங்கோ, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜோதிலதா, உதவி தலைமை ஆசிரியர் முருகன், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் மணி, பெற்றோர் ஆசிரியர் கழக அன்பழகன், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், நகர செயலாளர் வே.சத்தியமூர்த்தி, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் வ.அறிவு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத்கலீம், நகர பொறுப்பாளர்கள் கருணாகரன், கிருஷ்ணன், நகர சிறுபான்மை பிரிவு சாணவாஸ், ஷாஜகான் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு, பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.  


- செய்தியாளர் எம்.பிரேம்குமார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies