தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 1358 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர்களால் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதி உள்ளனவா என கேள்வி கேட்கப்பட்டது, இதற்கு பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் படி பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதுமான கழிப்பிட வசதி இல்லை எனவும் கழிப்பிடங்கள் கட்டி தர அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் சி இ.ஓ வால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.