Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரூர் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார்

Top Post Ad


அரூரில் நடைபெற்ற அதிமுக  பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களை அவதூராகவும் கண்ணிய குறைவாகவும் பேசியதாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரூர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. 


தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் ஆலோசனையின் பேரில் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டி.சந்திரசேகர், தலைமையில் திமுகவனர் அரூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் முல்லைரவி, அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபால், திமுக மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், வழக்கறிஞர்கள் சி.எம்.சேகர், சக்திவேல், ராஜ்குமார், நிர்வாகிகள் சிட்டிபாபு, மோகன், சூர்யாவெங்கடேசன், ரகுராமன், கார்த்தி, கட்ரைபழனி ஆகியோர் உடனிருந்தனர்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884