தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று (15.09.2023) ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்ற உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி ஆர்.பிரியா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) (பொ) திருமதி நசீர் இக்பால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.அருண்மொழிதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி சாந்தி உள்ளிட்ட துறை தலைமை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.