இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் கொண்டாடினார். இந் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் செந்தில், கவுன்சிலர் விமலன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, பாலகிருஷ்ணன், தகவல்தொழில்நுட்ப நிர்வாகிகள் அசோக், கிரிநாத் மோகன், நந்தகுமார், புஷ்பாகரன் கார்த்தி, உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.